Saturday, June 25, 2005

என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி!

திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனுப்ப ஒரு வார்த்தை கூட பேசாது மெளனமாய் இருந்தேன்.
இரண்டு மாதமாய் என்னோடு இந்த மெளனம், இப்படியே ஒரு வித தனிமை குடிகொண்டது காரணம் எனக்கு மட்டும் தெரிந்த உண்மை. என்னோடு, என்மனதோடு காதலனாய், காவலனாய் வாழ்ந்த சிவா சித்திராவை காதலிக்கிறான் என்ற செய்தி எனக்குள் இருந்த துடிப்பு, சுறுசுறுப்பு எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போன மாதிரி ஒரு உணர்வு. அவன் எனக்கு என்று எண்ணிய நான் ஏனோ அவனுக்கு நான் தானா என்று பார்க்க மறந்துவிட்டேன்.

என்ர ஒரே ஒரு சிநேகிதி சித்திரா அவளிற்கு கூட தெரியாமல் எல்லோ அவன் எனக்குள் வாழ்ந்தவன். இரண்டு மாசத்திற்கு முதல் அவன் சித்திராவிற்கு தன் காதலைத்தெரிவிக்கும் படி என்னிடமே வந்து தூது சொன்னான் என்ர உயிரை யாரோ பறிச்ச மாதிரி தெரிஞ்சுது. சிரித்து சிரித்து கலா கலா என்று பேசுவானே. நீ வா போ என்று என்னோடு தடையின்றி பேசுவான், இந்த உரிமையை நான் யாருக்கும் இருவரை கொடுத்ததில்லையே. சித்திராவைவிட என்னோடு தான் அவன் அதிகம் பேசுவான். சித்திராவை கூட வாங்கோ, போங்கோ என்று அந்நியமாய் கூப்பிடுவானே. என்னோடு தான் அத்தனை நெருக்கம். அதனால் தான் அவன் எனக்குள் வந்தான். ஆனால் ஆனால் சித்திராவிற்காய் தான் அவன் என்னோடு நெருக்கமானான் என்பதை, அவன் காதலிற்கு தூது செல்லச்சொன்ன போது தான் நான் தெரிந்து கொண்டேன். சித்திரா கூட அவன்ர காதலை மறுக்கவில்லை அவன் சொன்னவுடன் எதிர்பார்த்திருந்தவள் போல சம்மதம் சொல்லிவிட்டாள். ஒரு வேளை இது தான் உண்மைக்காதலா தெரியவில்லை சிவாவின் உணர்வு சித்திராவிற்கு இருந்தது. ஏன் என்ர உணர்வு சிவாவிற்கு வரவில்லை காரணம் தெரியவில்லை, அதற்காய் அவன் உணராததால் என் காதல் பொய்யென்று எப்படிச்சொல்ல முடியும். கொப்பி கொப்பியாய் 2 வருசம் அவனுக்காய் கவிதை என்ற பெயரில நான் எழுதியவற்றையும், அவன்ர பெயரையும் தேடித்தேடி அழிச்சனே என்ர மனம் அப்ப என்னை அறியாமல் அழுதிச்சே இதெல்லாம் பொய்யா? என் நண்பிக்காய் இவற்றை அழிக்க தான் என்னால் முடிந்தது மனசில எப்பவும் அவன் இருப்பான் என்று தான் நினைக்கிறன். ஒரு வேளை இதை யாருக்கும் முதலில சொல்லியிருந்தால் சிவாவை நான் இழந்திருக்க மாட்டேனோ என்று நினைக்கிறன். அவன் என்னை காதலிக்காட்டால் என்ன நான் காதலிச்சது அவனை அந்த நின்மதி போதும் எனக்கு. ஆனால் அவனும் சுயநலக்காரணா இதுவரை எப்படிப்பழகினவன். இப்ப நலம் கூட விசாரிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா இல்லை அவன் தவிர்க்கிறானா தெரியவில்லை. இப்ப கூட சித்திராவின் கலியாணத்திற்குரிய வேலைகளை செய்யத்தான் சித்திராவீட்டை வந்தன். ஆனா ஆனா இது சிவாவின் கலியாணமும் கூட. அவர்கள் காதல் வென்றிச்சா? என் காதல் தோத்ததா? காதலின் வெற்றி என்றால் என்ன கலியாணத்தில் முடிவதா? அப்படி என்றால் நான் தோர்த்தவள் தானே? தேற்றது என் நண்பியிடம் என்ற நினைவில் அவனது திருமண வேலையில் இறங்குகிறேன்.

Friday, June 10, 2005

பெண்மைக்குள்ளே ஒரு மென்மை!

"செல்லம் எல்லா வேளைக்கு வந்திடுறன். சிரிச்சுக்கொண்டு வழி அனுப்பனை" குகன் கெஞ்சினான். அவனது கெ(கொ)ஞ்சல் அவளை மாற்றவே இல்லை. இவன் எப்படி இப்படிச்செய்யலாம் இன்றைய நாள் எனக்குரிய நாள், இன்னொரு நிகழ்ச்சியை எப்படி போடலாம். சின்னனாய் அவன் மேல் கோவம் இருந்து அவன் அவள் சிரிக்காமல் ஒரு முத்தம் வாங்காமல் வெளியே போகான் என்பதை அறிந்தவள் "சரிடா போயிட்டு வா" என்று சொல்லி முத்தத்தோடு வழி அனுப்பியவள்.

சோபாவில் உட்கார்ந்து மெல்ல வயிற்றைத்தடவினாள். 6 மாதமாய் இன்னொரு குட்டிக் குகன் அவளுக்குள் தவழ்கிறான். இத்தனை நாள் அவள் தான் அவனிற்கு குழந்தை,தாய்,நண்பி எல்லாமே. ஈருயிர் ஓருடல் என்பது அது தானோ அப்படித்தான் வாழ்க்கை. ஒரு சுடுவார்த்தை பேசிய நினைவுகள் இருந்ததில்லை இருவருக்குள்ளும். வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்க்கையே எண்ணும்படி வாழ்கிறார்கள். ஊடலும் கூடலும் வருவது இந்த பிரிவால் தான். எந்த நேரமும் தன்னோடு ஒட்டியபடி அவன் இருக்க வேண்டும் என்று அவளும். வேலையோடு மாரடிக்கும் அவனும் வாழ்க்கையில், பார்த்து பார்த்து பலவருசம் காதலிச்சு சேர்ந்த சோடி தானே. அவன் ஆரம்ப நாட்களில் சொன்னவை நினைவில் " ஏம்பா நாங்க கலியாணம் கட்டி பிள்ளை குட்டி வந்து பேரன் பேத்தி வந்தாலும். நான் உன்னை காதலிக்கிறதை விடமாட்டன் நீயும் விடக்கூடாது சரியா". ஓம் என்று அன்று தலையாட்டியவள் இன்றுவரை ஒவ்வொரு விநாடியும் அவனைக்காதலிக்கிறாள், அவனும் தான். வாழ்க்கையின் நெளிவுகள் சுழிவுகள் அறியாமலா அவள். 7 நாட்களில் ஒரு நாள் ஞாயிற்று கிழமை இருவரும் ஒன்றாய் கழிப்பதாய் என்றோ போட்ட திட்டம். ஓரிரு முறை அவன் மீறியிருக்கிறான். என்ன தான் இருந்தாலும் இன்று அவன் மோசம் வேலை விடயமாய் 2 நாள் பயணமாம் தவிக்க விட்டு சென்று விட்டான். உறவுகள் யாரும் அருகில் இல்லை தனிமையாய் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் 2 வருட வாழ்க்கை இனிமையாய்த்தான் போனது.

அவள் கோவம் கொள்வதும் அவன் அன்பால் ஆற்றுவதும் அதில் ஒரு தனிச்சுகம் தான். அவளது சங்கடமான வேளைகள் அவனிற்கு போல் உணர்ந்து செயற்படுவதில் அவன் அவன் தான். எங்கு எப்போ சென்றாலும் அவளை அழைத்துச்செல்வான் அதுவும் ஒரு நாளுக்கு மேலான பயணம் என்றால் கூடவே அவளும் அவனுடன் சென்றுவிடுவாள், அவனும் விட்டுப்பிரியான். அவளுள் ஒரு உயிர் உள்ளே இருப்பதால். வீணான சிரமங்கள் வேண்டாம் என்பதால் இன்று அவளை விட்டுச்சென்றான் இது தான் நடந்தது. "மனிசியையும் பிள்ளையையும் விட்டிட்டு அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு" என்று அவனைத்திட்டியபடி தூங்கியவள். எழும்பியபோது அறையினுள் கட்டிலில் இருந்தாள். பக்கத்தில் அவன் தலை தடவியபடி. "என்னடா கோவமா இந்த நேரம் என்ன தூக்கம்?" செல்லமாய் மூக்கை கிள்ளினான். கண்ணை ஒரு தடவை கசக்கிப்பார்த்தவள். "ஏம்பா நீ வெளியூர் போகலையா முக்கியமான விசயம் என்றாய் என்னாச்சு" என்றவள் அவனது மார்போடு சாய்ந்து கொண்டாள். "உன்னை விட்டிட்டு போய்.

என்ன செய்யிறியோ என்னமோ என்று பதைபதைக்க. போன விசயமும் ஒழுங்கா முடிக்காமல் உன்னையும் விட்டிட்டு போய் யார் அவஸ்தை படுறது. உதில போய் திரும்பிட்டன் அடிச்சு சொல்லிக்கிடக்கு வேணும் என்றால் அவை இஞ்ச வரட்டும். என்ர மனிசி பிள்ளையை விட உந்த பிசினஸ் பெரிசா என்ன. சரி இப்பவாவது கொஞ்சம் இழியன். என்று குட்டினான்". அவனது வாய் உதிர்ந்தது அவளது உள்ளுள் என்னமோ போல் இருந்தது. நன்றி சொல்வதற்கு மேல் அவனை இறுக கட்டி முத்தமழை பொழிவதைவிட அவளால் என்ன செய்ய முடியும். அந்த நொடிகளில் அவளது முகமதில் அவன் கண்ட மாற்றம். அந்த விடயம் முடிந்து வரும் லாபத்தை விட பெரிசாய் தெரிந்தது. மெல்ல அணைத்துக்கொண்டான். அவளது உள்ளுணர்வுகளை முழுமையாய் புரிந்தவனாய்.

பெண்மைக்குள்ளே ஒரு மென்மை!

"செல்லம் எல்லா வேளைக்கு வந்திடுறன். சிரிச்சுக்கொண்டு வழி அனுப்பனை" குகன் கெஞ்சினான். அவனது கெ(கொ)ஞ்சல் அவளை மாற்றவே இல்லை. இவன் எப்படி இப்படிச்செய்யலாம் இன்றைய நாள் எனக்குரிய நாள், இன்னொரு நிகழ்ச்சியை எப்படி போடலாம். சின்னனாய் அவன் மேல் கோவம் இருந்து அவன் அவள் சிரிக்காமல் ஒரு முத்தம் வாங்காமல் வெளியே போகான் என்பதை அறிந்தவள் "சரிடா போயிட்டு வா" என்று சொல்லி முத்தத்தோடு வழி அனுப்பியவள்.

சோபாவில் உட்கார்ந்து மெல்ல வயிற்றைத்தடவினாள். 6 மாதமாய் இன்னொரு குட்டிக் குகன் அவளுக்குள் தவழ்கிறான். இத்தனை நாள் அவள் தான் அவனிற்கு குழந்தை,தாய்,நண்பி எல்லாமே. ஈருயிர் ஓருடல் என்பது அது தானோ அப்படித்தான் வாழ்க்கை. ஒரு சுடுவார்த்தை பேசிய நினைவுகள் இருந்ததில்லை இருவருக்குள்ளும். வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்க்கையே எண்ணும்படி வாழ்கிறார்கள். ஊடலும் கூடலும் வருவது இந்த பிரிவால் தான். எந்த நேரமும் தன்னோடு ஒட்டியபடி அவன் இருக்க வேண்டும் என்று அவளும். வேலையோடு மாரடிக்கும் அவனும் வாழ்க்கையில், பார்த்து பார்த்து பலவருசம் காதலிச்சு சேர்ந்த சோடி தானே.

அவன் ஆரம்ப நாட்களில் சொன்னவை நினைவில் " ஏம்பா நாங்க கலியாணம் கட்டி பிள்ளை குட்டி வந்து பேரன் பேத்தி வந்தாலும். நான் உன்னை காதலிக்கிறதை விடமாட்டன் நீயும் விடக்கூடாது சரியா". ஓம் என்று அன்று தலையாட்டியவள் இன்றுவரை ஒவ்வொரு விநாடியும் அவனைக்காதலிக்கிறாள், அவனும் தான். வாழ்க்கையின் நெளிவுகள் சுழிவுகள் அறியாமலா அவள். 7 நாட்களில் ஒரு நாள் ஞாயிற்று கிழமை இருவரும் ஒன்றாய் கழிப்பதாய் என்றோ போட்ட திட்டம். ஓரிரு முறை அவன் மீறியிருக்கிறான். என்ன தான் இருந்தாலும் இன்று அவன் மோசம் வேலை விடயமாய் 2 நாள் பயணமாம் தவிக்க விட்டு சென்று விட்டான்.

உறவுகள் யாரும் அருகில் இல்லை தனிமையாய் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் 2 வருட வாழ்க்கை இனிமையாய்த்தான் போனது. அவள் கோவம் கொள்வதும் அவன் அன்பால் ஆற்றுவதும் அதில் ஒரு தனிச்சுகம் தான். அவளது சங்கடமான வேளைகள் அவனிற்கு போல் உணர்ந்து செயற்படுவதில் அவன் அவன் தான். எங்கு எப்போ சென்றாலும் அவளை அழைத்துச்செல்வான் அதுவும் ஒரு நாளுக்கு மேலான பயணம் என்றால் கூடவே அவளும் அவனுடன் சென்றுவிடுவாள், அவனும் விட்டுப்பிரியான். அவளுள் ஒரு உயிர் உள்ளே இருப்பதால். வீணான சிரமங்கள் வேண்டாம் என்பதால் இன்று அவளை விட்டுச்சென்றான் இது தான் நடந்தது. "மனிசியையும் பிள்ளையையும் விட்டிட்டு அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு" என்று அவனைத்திட்டியபடி தூங்கியவள். எழும்பியபோது அறையினுள் கட்டிலில் இருந்தாள். பக்கத்தில் அவன் தலை தடவியபடி. "என்னடா கோவமா இந்த நேரம் என்ன தூக்கம்?" செல்லமாய் மூக்கை கிள்ளினான். கண்ணை ஒரு தடவை கசக்கிப்பார்த்தவள். "ஏம்பா நீ வெளியூர் போகலையா முக்கியமான விசயம் என்றாய் என்னாச்சு" என்றவள் அவனது மார்போடு சாய்ந்து கொண்டாள்.

"உன்னை விட்டிட்டு போய். என்ன செய்யிறியோ என்னமோ என்று பதைபதைக்க. போன விசயமும் ஒழுங்கா முடிக்காமல் உன்னையும் விட்டிட்டு போய் யார் அவஸ்தை படுறது. உதில போய் திரும்பிட்டன் அடிச்சு சொல்லிக்கிடக்கு வேணும் என்றால் அவை இஞ்ச வரட்டும். என்ர மனிசி பிள்ளையை விட உந்த பிசினஸ் பெரிசா என்ன. சரி இப்பவாவது கொஞ்சம் இழியன். என்று குட்டினான்". அவனது வாய் உதிர்ந்தது அவளது உள்ளுள் என்னமோ போல் இருந்தது. நன்றி சொல்வதற்கு மேல் அவனை இறுக கட்டி முத்தமழை பொழிவதைவிட அவளால் என்ன செய்ய முடியும். அந்த நொடிகளில் அவளது முகமதில் அவன் கண்ட மாற்றம். அந்த விடயம் முடிந்து வரும் லாபத்தை விட பெரிசாய் தெரிந்தது. மெல்ல அணைத்துக்கொண்டான். அவளது உள்ளுணர்வுகளை முழுமையாய் புரிந்தவனாய்.

free hit counter